சில வாரங்களுக்கு முன் எதேச்சையாய் பதிவுலகம் அறிமுகம் ஆனது எனக்கு. இங்கேதான் எத்தனை எத்தனை படைப்புகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடன். மனதை பறிகொடுத்துவிட்டேன். எனக்கென்றும் ஒரு பக்கம் உருவாக்க ஆசைப்பட்டேன். இன்று அது நிறைவேறியும் விட்டது.
என் பெயரில் இருக்கும் எழில், நான் பார்க்கும் விஷயங்களையும் எழிலானதாகவே தோன்ற செய்கின்றது. நான் பார்க்கும் எழிலான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். புதியவனான எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....